அமெரிக்காவே உண்மையான போர்க்குற்றவாளி என்று இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே குற்றம் சாட்டியுள்ளார்.
இலங்கை கண்டியில் புவிநேரம் என்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு பேசிய அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சே, புவி வெப்பமடையக் காரணமான நாடுகளே உண்மையான போர்க்குற்றவாளிகள் என்று குற்றஞ்சாட்டினார்.
மேலும், புவி வெப்படைதலால், அனைத்து தாவர மற்றும் விலங்கினங்களும் அழிந்து போகக் கூடும்.
புவி வெப்பமடையக் காரணமான நாடுகள் தான் உண்மையான போர்க்குற்றவாளிகள், மனித உரிமைகளை மீறியவர்கள். இந்த விதிகளை மீறுகின்ற வகையில் மேற்குலக நாடுகளே உள்ளன.
புள்ளிவிபரங்களின்படி, புவி வெப்பமடைதலுக்கு காரணமான மிகப்பெரிய நாடுகளில், முதலாவது இடத்தில் அமெரிக்கா உள்ளது. புவி வெப்பமடைதலுக்கு அதன் பங்களிப்பு 25 விழுக்காடு என்று ராஜபக்சே குறிப்பிட்டுள்ளார்.