Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல்: பாகிஸ்தானில் 12 தீவிரவாதிகள் பலி

Webdunia
புதன், 1 ஏப்ரல் 2009 (12:46 IST)
பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் தாலிபான், அல்-கய்டா பயிற்சி மையமாகக் கருதப்படும் இடத்தின் மீது நடத்தப்பட்ட ஏவுணைத் தாக்குதலில் 12 தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளனர். இத்தாக்குதலை அமெரிக்கப் படைகள் நடத்தியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

அந்நாட்டின் ஓரக்சாய் பழங்குடியினர் பகுதியில் உள்ள ஹங்கு பகுதியில் இருந்து 25 கி.மீ தொலையில், 2 ஏவுகணைகள் வெடித்ததாக பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

அல்-கய்டா பயிற்சி மையமாகக் கருதப்படும் இடத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பேர் உயிரிழந்ததாகவும், இதில் சில அயல்நாட்டினரும் அடங்குவர் என்றும் அவர் தெரிவித்தார்.

ஏவுகணைத் தாக்குதலில் 12 தீவிரவாதிகள் உயிரிழந்ததாக மற்றொரு பாதுகாப்பு அதிகாரி உறுதி செய்துள்ளார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments