Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல்: பாகிஸ்தானில் 12 தீவிரவாதிகள் பலி

அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல்: பாகிஸ்தானில் 12 தீவிரவாதிகள் பலி
பெஷாவர் , புதன், 1 ஏப்ரல் 2009 (12:46 IST)
பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் தாலிபான், அல்-கய்டா பயிற்சி மையமாகக் கருதப்படும் இடத்தின் மீது நடத்தப்பட்ட ஏவுணைத் தாக்குதலில் 12 தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளனர். இத்தாக்குதலை அமெரிக்கப் படைகள் நடத்தியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

அந்நாட்டின் ஓரக்சாய் பழங்குடியினர் பகுதியில் உள்ள ஹங்கு பகுதியில் இருந்து 25 கி.மீ தொலையில், 2 ஏவுகணைகள் வெடித்ததாக பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

அல்-கய்டா பயிற்சி மையமாகக் கருதப்படும் இடத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பேர் உயிரிழந்ததாகவும், இதில் சில அயல்நாட்டினரும் அடங்குவர் என்றும் அவர் தெரிவித்தார்.

ஏவுகணைத் தாக்குதலில் 12 தீவிரவாதிகள் உயிரிழந்ததாக மற்றொரு பாதுகாப்பு அதிகாரி உறுதி செய்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil