Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் 2 வயது தம்பியை சுட்டுக் கொன்ற 3வயது சிறுமி!

Webdunia
செவ்வாய், 22 ஏப்ரல் 2014 (12:39 IST)
அமெரிக்காவின் உத்தவில் கேகி என்ற பகுதியில் 3வயது சிறுமி தனது 2 வயது தம்பியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது பெரும் பரபரப்பாகியுள்ளது.
 
வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்தாள் 3வது சிறுமி, உடனே 2 வயது சிறுவன் அது தனக்கும் வேண்டும் என்று கேட்டு சண்டை நடந்துள்ளது. ஒருவருக்கொருவர் பறிக்க நினைத்தபோது சிறுமியின் கையில் இருந்த கைத்துப்பாக்கியிலிருந்து குண்டு பாய்ந்தது.
 
துப்பாக்கி குண்டு சிறுவனின் உடலில் பாய்ந்து ரத்தம் கொட்டியது.  துப்பாக்கி சத்தம் கேட்டு ஓடிவந்த தாயார் குண்டடிப்பட்டு மயங்கி கிடந்த சிறுவனை ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிறுவனுக்கு  சிகிச்சை  நடந்தது. இருந்தும் அவன் பரிதாபமாக இறந்தான். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இச்சம்பவம் தற்செயலாக நடந்த விபத்து என வழக்கு பதிவு செய்துள்ளனர். அமெரிக்காவில் இந்த மாதத்தில் மட்டும் இது போன்று 4 சம்பவங்கள் நடந்துள்ளன.
 
குழந்தைகள் எடுக்கும் படியாக துப்பாக்கியை வைத்திருந்த பெற்றோருக்கு தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை பெளர்ணமி.! திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.!

இரவு 10 மணி வரை 34 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கைகளால் மனிதக் கழிவை அகற்றும் ஊழியர்.! மாநகராட்சி மீது நடவடிக்கை பாயுமா.?

ராஜேஷ் தாஸ் மீது மனைவி புகார்.! கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு..!!

நடுவானில் குலுங்கிய விமானம்..! பயணி ஒருவர் உயிரிழந்த பரிதாபம்..!!

Show comments