Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணு உலை ஆய்வு: ஐ.நா. அதிகாரிகளுக்கான தடையை நீக்கியது தென்கொரியா!

Webdunia
செவ்வாய், 14 அக்டோபர் 2008 (17:36 IST)
பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து தென்கொரியாவை அமெரிக்கா நீக்கியதைத் தொடர்ந்து, தனது புளுடோனியம் அணு உலைகளை ஐ.நா. ஆய்வாளர்கள் பார்வையிடுவதற்கு விதித்திருந்த தடையை தென்கொரியா நீக்கியுள்ளது.

இந்தத் தடையை தென்கொரியா விலக்கியதன் மூலம் ஐ.நா ஆய்வாளர்கள் அந்நாட்டின் யோங்பயோன் பகுதியில் உள்ள புளுடோனியம் அணு உலைகளை ஆய்வு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்கொரியாவின் இந்த தடை விலக்கல் முடிவுக்கு ஐ.நா பொதுச் செயலாளர் பான்-கி-மூன் ஆதரவு தெரிவித்துள்ளார். கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பகுதியாக மாற்றுவதற்கு இந்த நடவடிக்கை மற்றுமொரு படிக்கல்லாக அமையும் என்று பான்-கி-மூன் கூறியதாக அவரது செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

இதற்கிடையில் யோங்பயோன் பகுதியில் உள்ள தனது அணு உலை கட்டமைப்புகளை தகர்க்கவும் தென்கொரியா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments