Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கைக்கு 100 கோடி கல்வி உதவி: எஸ்.எம்.கிருஷ்ணா

Webdunia
வியாழன், 19 ஜனவரி 2012 (19:15 IST)
இலங்கைக்கு 100 கோடி கல்வி உதவி அளிக்கப்படுவதாக இந்திய அயலுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள காலே-ஹிக்கடுவா இடையேயான ரயில்வே பாலத்தை இந்தியாவின் உதவியுடன் இலங்அ கை அரசு கட்டி முடித்துள்ளது.

இந்நிலையில் நான்கு நாள் பயணமாக இலங்கை சென்ற இந்திய அயலுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா,அந்த ரயில் பாதையை இன்று துவக்கி வைத்து பேசியதாவது:

இலங்கையில் மனிதவள மேம்பாட்டுக்கு உதவும் வகையில், இந்திய அரசு 100 கோடி ரூபாயை கல்வி உதவிக்காக அளிப்பதில் பெருமை அடைகிறேன்.

இலங்கை மாணவர்களுக்கான கல்வி கட்டணம், புத்தக கட்டணம், தங்குவதற்கான கட்டணம், மாதாந்திர சம்பளம் உள்ளிட்ட இந்த உதவித்தொகை 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

மேலும் இளநிலை படிப்பிற்கு 120 இடங்களும்,கணினி பொறியியல் படிப்பிற்கு 25 இடங்களும், முதுநிலை படிப்பிற்கு 50 இடங்களும், சுய நிதி திட்டத்தின் கீழுள்ளதற்கு 40 இடங்களுமாக இந்த திட்டம் மும்மடங்கில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments