Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இலங்கைக்கு 100 கோடி கல்வி உதவி: எஸ்.எம்.கிருஷ்ணா

இலங்கைக்கு 100 கோடி கல்வி உதவி: எஸ்.எம்.கிருஷ்ணா
கொழும்பு , வியாழன், 19 ஜனவரி 2012 (19:15 IST)
இலங்கைக்கு 100 கோடி கல்வி உதவி அளிக்கப்படுவதாக இந்திய அயலுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள காலே-ஹிக்கடுவா இடையேயான ரயில்வே பாலத்தை இந்தியாவின் உதவியுடன் இலங்அ கை அரசு கட்டி முடித்துள்ளது.

இந்நிலையில் நான்கு நாள் பயணமாக இலங்கை சென்ற இந்திய அயலுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா,அந்த ரயில் பாதையை இன்று துவக்கி வைத்து பேசியதாவது:

இலங்கையில் மனிதவள மேம்பாட்டுக்கு உதவும் வகையில், இந்திய அரசு 100 கோடி ரூபாயை கல்வி உதவிக்காக அளிப்பதில் பெருமை அடைகிறேன்.

இலங்கை மாணவர்களுக்கான கல்வி கட்டணம், புத்தக கட்டணம், தங்குவதற்கான கட்டணம், மாதாந்திர சம்பளம் உள்ளிட்ட இந்த உதவித்தொகை 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

மேலும் இளநிலை படிப்பிற்கு 120 இடங்களும்,கணினி பொறியியல் படிப்பிற்கு 25 இடங்களும், முதுநிலை படிப்பிற்கு 50 இடங்களும், சுய நிதி திட்டத்தின் கீழுள்ளதற்கு 40 இடங்களுமாக இந்த திட்டம் மும்மடங்கில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil