மத்திய ஆப்பிரிக்க நாடான புரூண்டியில் மதுபான விடுதியில் நடத்தப்பட்ட காட்டுமிராண்டித் தனமான தாக்குதலில் 36 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
காங்கோவைச் சேர்ந்தவர்கள் திடீரென துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியதில் 36 பேர் கொல்லப்பட்டனர்.
புருண்டியில் இரு பிரிவினரிடையே கடந்த பல ஆண்டுகளாக சண்டை நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை 3 லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.