பாகிஸ்தானின் வடமேற்கு பழங்குடியினர் பகுதியில் நேற்று நடந்த குண்டு வெடிப்பில் தீவிரவாதி உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானின் பழங்குடியினர் பகுதியான தெற்கு வஜிரிஸ்தானில் வானா பகுதியில் உள்ள மார்க்கெட்டில் நேற்று குண்டு வெடித்தது. இதில் மவுலவி அப்பாஸ் வாஜிர் என்ற தீவிரவாதி கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் மேலும் 4 பேர் கொல்லப்பட்டனர், 6 பேர் படுகாயமடைந்தனர். இதனால் அந்த மார்கெட் பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
இதுவரை இந்த சமபவம் குறித்து எந்த அமைப்பும் பொறுப்பேற்காததால் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்துள்ளதால அல்லது இது தற்கொலைப் படையின் சதியா என்ற குழப்பம் நீடிக்கின்றது.