தமிழ்நாட்டில் தனது அமைச்சர்கள், உறவினர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளார் இலங்கை அதிபர் ராஜபக்ச.
அதிபர் மாளிகையில் வெளிநாட்டு செய்தியாளர்களை சந்தித்த ராஜபக்ச, தமிழ்நாட்டில் தனது அமைச்சர்கள், உறவினர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் குறித்து கவலை தெரிவித்தார்.
தனது உறவினரும், தொழிலதிபருமான திருக்குமார் நடேசன், அமைச்சர் நிருபமா ராஜபக்சவை திருமணம் செய்து கொண்ட ஒரே காரணத்துக்காகவே தாக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
அவர் ஒரு இந்து என்றும், வட பகுதியைச் சேர்ந்த தமிழர் என்றும் கூறிய ராஜபக்ச, திருக்குமார் நடேசன் மீதான தாக்குதலுக்கு இந்திய மீனவர்கள் கூட எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்று சுட்டிக்காட்டினார்.
தமிழ்நாட்டுக்கு வரும் இலங்கை அமைச்சர்கள், உறவினர்களை கவனமாகப் பாதுகாக்குமாறு, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.