ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு இடம் தர வேண்டும் என்று கூறிய அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ ், இராக்கிற்க ு இராணுவத்த ை அனுப்பியத ு சரியா ன நடவடிக்கைய ே என்று தெரிவித ்துள்ளார்.
உலகத்தில் மிக உறுதியான ஜனநாயகம் உள்ள நாடாக இந்தியா உள்ளது. சகிப்பு தன்மை, அமைதி, பல்வேறு மதத்தினரை கொண்ட ஜனநாயகத்தை கொண்டது. நீண்ட கால அடிப்படையில் அமெரிக்க பொருளாதாரம் நீடித்து நிலைப்பதற்கு இந்தியாவில் இருந்து வந்த மக்களின் பங்களிப்பு மிகவும் அதிகம். இரு நாடுகளுக்கு இடையிலான `விசா' விதிகளை மறு ஆய்வு செய்ய வேண்டும்.
மிகவும் திறமை வாய்ந்த பணியாளர்களுக்கு 'எச்1பி விசா'வை அமெரிக்க வழங்குகிறது. அவற்றை பெரும்பாலும் இந்தியர்களே பெற்றுள்ளனர். சர்வதேச அளவில் மிகப்பெரிய பங்கை இந்தியா வகிக்க வேண்டும். ஆனால், அதற்கான பாதை மிகவும் சிக்கலாக உள்ளது. ஏற்கனவே, ஜி-20 நாடுகள் அமைப்பில் இந்தியா இருக்கிறது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை 5-ல் இருந்து 10 ஆக உயர்த்தி விரிவுபடுத்த வேண்டும் என்று என்னுடைய ஆட்சியில் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டது. ஆனால், அது மிகவும் கடினமானதாக உள்ளது. எனினும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு ஒரு இடத்தை பெற்று தருவதற்கான சாத்தியக் கூறுகளை அமெரிக்கா தொடர்ந்து பரிசீலித்து வருகிறது. இந்தியாவுக்கு ஒரு இடம் அளிக்கப்பட வேண்டும் என்று ஜார்ஜ் புஷ் கூறினார்.