Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனப் படுகொலைக்கு என்றாவது ராஜபக்ச பதில் கூறியாக வேண்டும்: பேராசிரியர் பாய்ல்!

Webdunia
வெற்றி பெற்ற நாடுகள் எதுவும் போர் குற்றத்திற்காக தண்டிக்கப்பட்ட வரலாறு இல்லை என்று சிறிலங்க அரசின் தூதர் பலித கோஹனா கூறியுள்ளதை மறுத்துள்ள சர்வதேச சட்ட அறிஞர் பிரான்சிஸ் பாய்ல், என்றாவது ஒருநாள் ராஜபக்ச சகோதரர்கள் தாங்கள் நடத்திய இனப் படுகொலைக்கு பதில் கூறியே ஆக வேண்டும் என்று கூறியுள்ளார்.

சிறிபிரீனிகாவில் நடத்திய இனப் படுகொலைக்கும், மனித உரிமை மீறல்களுக்கும், போர் குற்றங்களுக்கும் காரணமான யுகோஸ்லாவிய அதிபர் மிலோசவிச், அப்பொறுப்பில் இருந்தபோதுதான் வழக்குத் தொடரப்பட்டு விசாரணை நடத்தபட்டது என்றும், விசாரணை முடிவதற்குள் அவர் இறந்துவிட்டார் என்றும் கூறியுள்ள பேராசிரியர் பாய்ல், ஸ்பிர்க்கா குடியரசின் அதிபராக தனக்குத் தானே முடிசூட்டிக்கொண்ட மிலோசவிச்சின் கையாள் ராடோவான் கராட்சிக் இனப் படுகொலைக் குற்றத்திற்கான விசாரணையில் உள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்நெட் இணையத் தளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு கூறியுள்ள பாய்ல், “ஒரு நாள் சிறிலங்க அரசு இனப் படுகொலையாளர்களையும் - குறிப்பாக ராஜபக்ச சகோதரர்களையும், இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவையும் - வன்னியில் அவர்களை நிகழ்த்திய தமிழினப் படுகொலைக்குப் பொறுப்பாக்குவோம ்” என்று கூறியுள்ளார்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments