Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னை 20ஆ‌ம் தே‌தி நகை கண்காட்சி!

சென்னை 20ஆ‌ம் தே‌தி நகை கண்காட்சி!
, செவ்வாய், 18 மார்ச் 2008 (10:14 IST)
சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இஸ்பஹானி சென்டர் கீழ் தளத்தில் செயல்பட்டு வரும் ஆர்ட் காரட் ஷோருமில் ராஜ்வாடா கலெக்ஷன் நகைகள் கண்காட்சி, விற்பனை மா‌ர்‌ச் 20ஆ‌ம் தேதி தொடங்கி 24ஆ‌ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த கண்காட்சியில் விலை உயர்ந்த ராஜ்வாடா கலெக்ஷன் நகைகள் ரூபி, எமரால்டு, டூர்மலின், முத்து, குந்தன் இடம் பெற உள்ளது. இந்த நகைகள் எல்லாம் முகலாய காலத்தில் புகழ் பெற்று விளங்கியவையாகும்.

`ஜோதா அக்பர்' படத்தில் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யாராய் பயன்படுத்திய நகைகளின் மாடல்கள் இந்த கண்காட்சியில் இடம் பெறுகிறது. இது தவிர ராஜ்வாடா நெக்லஸ், வளையல், காதணி நகைகள் இடம் பெற உள்ளன.

ஒவ்வொரு நாளும் காலை 11 மணி தொடங்கி இரவு 8 மணி வரை கண்காட்சி நடைபெறுகிறது. பொது மக்கள் இந்த நேரத்தில் பார்வையிட்டு நகைகளை வாங்கி செல்லலாம்.

Share this Story:

Follow Webdunia tamil