விநாயகரின் அவதாரங்களை விளக்கும் கணேச புராணம்....!

Webdunia
விநாயகருக்கு அரசமரத்தடியோ, குளக்கரையோ அல்லது தெருமுனை முச்சந்தியோ என அவர் அமர்ந்திருக்கும் இடங்களே மிக மிக  எளிமையான இடங்கள் ஆகும்.
முழுமுதற் கடவுள் - கடவுள் அனைத்திற்கும் கடவுள் ஆதலால் முழுமுதற் கடவுள் என்று பெயர் பெற்றார். ஆனைமுகன் -  யானை முகத்தை  கொண்டவர் என்பதால்  ஆனைமுகன் என்று பெயர் பெற்றார். கணபதி - பூதகணங்கள் அனைத்திற்கும் அதிபதி ஆதலால் கணபதி என்று பெயர்  பெற்றார். கஜமுகன் - யானைமுகத்தை கொண்டவர் என்பதால் கஜமுகன் என்று பெயர் பெற்றார். விக்னேஸ்வரன் - பிரச்சினைகளைத் தீர்க்கும் கடவுள் என்பதால் விக்னேஸ்வரன் என்று பெயர் பெற்றார்.
 
விநாயகரை பற்றி முழு வரலாற்றினைக் கொண்ட நூல் கணேச புராணம் ஆகும், இதில் இவருடைய அவதாரங்கள் பற்றி தெளிவாகக் கூறப்பட்டிருக்கும். இவர் மொத்தம் 4 அவதாரங்கள் எடுத்ததாக அந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
 
கிருத யுகம்: காஸ்யப முனிவருக்கும் அதீதீ தேவிக்கும் மகாகடர் என்ற பெயர் கொண்ட பிள்ளையாக அவதரித்து அசுரர்களை அழித்து  மக்களை காப்பாற்றினார்.
 
திரேதா யுகம்: இரண்டாவது யுகத்தில் அம்பிகை பார்வதியின் பிள்ளையாக அவதரித்து மயூரேசர் என்ற பெயர் கொண்ட பிள்ளையாக இருந்தார்.
 
துவாபர யுகம்: பராசர மகரிஷி மற்றும் பராசர தேவி வத்ஸலா ஆகியோரின் அன்பு மகனாக கஜானனன் என்ற பெயரில் அவதரித்தார்.
 
கலி யுகம்: 4 வது யுகத்திலே சிவபெருமானுக்கும் அம்பிகை பார்வதி தேவிக்கும் விநாயகர் என்ற பெயர் கொண்ட பிள்ளையாக அவதரித்தார் என்று கூறப்படுகிறது. கலியுகத்தில் விநாயகர் பிறந்த தினத்தைத் தான் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகிறோம் என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி வைகுண்ட ஏகாதசி: 24 லட்சம் விண்ணப்பங்கள்; இன்று குலுக்கல்!

திருவண்ணாமலை கிரிவலம்: இந்த மாத பௌர்ணமிக்கான உகந்த நேரம் அறிவிப்பு!

ஞானம், கல்வி அருளும் கும்பேஸ்வரர்: கும்பகோணம் ஆலயச் சிறப்புகள்!

திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோயில்: நாய் வாகனமில்லா யோக பைரவர் தரிசனம்

மலைபோன்ற சிக்கல்களை தீர்க்கும் கரியமாணிக்கப் பெருமாள் திருத்தலம்!

அடுத்த கட்டுரையில்
Show comments