Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காராமணி புளி குழம்பு செய்ய...!

Webdunia
தேவையானப் பொருள்கள்:
 
காராமணி - 3 கைப்பிடி
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
சின்ன வெங்காயம் - 10
முழு பூண்டு - 1
தக்காளி - 2
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - 2  டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு ஏற்ப
 
வறுத்துப் பொடி செய்ய:
 
தனியா - ஒரு டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 1/2 டீஸ்பூன்
மிளகு - 2
சீரகம் - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
தாளிக்க:
 
நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்
வடகம் - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 1
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
சீரகம் - சிறிதளவு
கடலைப் பருப்பு - தேவையான அளவு
வெந்தயம் - தேவையான அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு
 
செய்முறை:
 
முதல் நாள் இரவே காராமணியை ஊற வைத்து முதலில் பயறு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி, சிறிது உப்பு போட்டு வேக வைக்கவும். சீக்கிரமே வெந்துவிடும். வெந்ததும் நீரை வடித்துவிடவும். புளி கரைத்து வைத்துக்கொள்ளவும்.
 
வறுத்துப் பொடிக்க வேண்டியதை வெறும் வாணலியில் வறுத்து ஆறியதும் பொடித்து வைக்கவும். வெங்காயம், தக்காளி நறுக்கி  வைக்கவும். பூண்டு உரித்து வைக்கவும். 
 
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் தாளிக்க உள்ள பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத்  தாளித்துவிட்டு, முதலில் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். அடுத்து தக்காளி வதக்கி, அதன் பிறகு வெந்த பயறு சேர்த்து  வதக்கி, அதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு புளித்தண்ணீர் ஊற்றி மூடி கொதிக்க விடவும்.  நன்றாகக் கொதித்து, வாசனை வந்ததும் பொடித்து வைத்துள்ளப் பொடியைப் போட்டுக் கலக்கி விட்டு ஒரு கொதி வந்ததும்  இறக்கவும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிப்பு உணவுகள் அதிகம் சாப்பிட்டால் அறிவாற்றல் பாதிக்குமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

டீ, காபி அதிகமாக குடித்தால் இந்த பிரச்சினை வருமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

நீரிழிவு பாதம் வெட்டி அகற்றப்படுவதை தடுக்கும் உத்திகள்! - புரொஃபசர் M. விஸ்வநாதன் வழங்கிய உரை!

வெயில் காலத்தில் உடல் பாதுகாப்புக்கு பயன் தரும் வெங்காயம்..!

மூத்த குடிமக்களுக்கு பின்ஹோல் பியூப்பிலோபிளாஸ்டி மூலம் சிகிச்சை! - டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை!

அடுத்த கட்டுரையில்
Show comments