Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவை மிகுந்த தேங்காய் பால் சாதம் செய்ய !!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
பாஸ்மதி அரிசி - 250 கிராம்
பெரிய வெங்காயம் - 3
வெள்ளை பூண்டு - 20 பல்
பச்சை மிளகாய் - 7
புதினா - 1 கட்டு
கொத்தமல்லி - சிறிதளவு
நெய் - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவைக்கு ஏற்ப
தேங்காய் பால் - 3 கப்
 
தாளிக்க தேவையான பொருட்கள்:
 
பட்டை, லவங்கம் - தேவையான அளவு
கிராம்பு, ஏலக்காய் - தேவையான அளவு
அன்னாசி பூ, கல் பாசி - தேவையான அளவு

செய்முறை:
 
ஒரு குக்கரில் தேங்காய்எண்ணெய் மற்றும் நெய் தேவையான அளவு ஊற்றி, தாளிப்பு பொருட்களை போட்டு தாளித்து நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், புதினா மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்றாக வதக்கவும்.
 
10 நிமிடம் ஊற வைத்த அரிசியை நீர் வடித்த பின், அதனுடன் சேர்த்து வதக்கவும்.. பின் மேலே குறிப்பிட்ட அளவு தேங்காய்பாலை ஊற்றி கிளறவும். குக்கரை மூடி 2 விசில் வரும் வரை காத்திருக்கவும். சூடான சுவையான தேங்காய் பால் சாதம் தயார்.
 
குறிப்பு: இந்த சாதாம் செய்ய தேவைப்பட்டால் உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணியும் சேர்த்து சமைக்கலாம். இதற்கு துணை உணவாக சிக்கன் கிரேவி ஏற்றதாக  இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சைலண்ட் ஹார்ட் அட்டாக்.. கவனிக்காவிட்டால் உயிருக்கே ஆபத்து..!

இனிப்பு உணவுகள் அதிகம் சாப்பிட்டால் அறிவாற்றல் பாதிக்குமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

டீ, காபி அதிகமாக குடித்தால் இந்த பிரச்சினை வருமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

நீரிழிவு பாதம் வெட்டி அகற்றப்படுவதை தடுக்கும் உத்திகள்! - புரொஃபசர் M. விஸ்வநாதன் வழங்கிய உரை!

வெயில் காலத்தில் உடல் பாதுகாப்புக்கு பயன் தரும் வெங்காயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments