ஆலு பன்னீர் கோப்தா செய்ய...!

Webdunia
மாலை நேரத்தில் டீ அல்லது காபியுடன், சூடாக ஏதாவது சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று நினைப்போம். எப்போதும்  பஜ்ஜி, போண்டா போன்றவற்றைதான் சாப்பிடுவோம். ஒரு மாறுதலுக்கு ஆலு பன்னீர் கோப்தா செய்து சாப்பிடுங்கள் சுவையாக   இருக்கும்.

 
தேவையான பொருட்கள்: 
 
பன்னீர் - 200 கிராம் (துருவியது) 
உருளைக்கிழங்கு - 3 (வேக வைத்து, மசித்தது) 
பால் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன் 
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன் 
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் 
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன் 
கொத்தமல்லி - 1 1/2 டேபிள் ஸ்பூன்
சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன் 
எண்ணெய் - தேவையான அளவு 
உப்பு - தேவையான அளவு 
 
செய்முறை: 
 
முதலில் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து  கொள்ள வேண்டும். 
 
பிறகு சிறு உருண்டைகளாக உருட்டி, லேசாக தட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். நமக்கு வேண்டிய வடிவத்தில் அவற்றை அடிவமைத்து கொள்ளலாம். பின்பு ஒரு காடாயை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.  அவ்வளவுதான். சுவையான ஆலு பன்னீர் கோப்தா தயார். இதனை தக்காளீ சாய்ஸ் உடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குளிர்காலத்தில் எந்த உணவுகளை சாப்பிடவேண்டும்? எதை தவிர்க்க வேண்டும்?!..

குளிர்காலத்தில் தயிர் சாப்பிடலாமா?!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் தூக்கம் இல்லாமல தவிக்கிறீர்களா?!.. இதை ஃபாலோ பண்ணுங்க!...

மாலை 6 மணிக்கு மேல் என்னென்ன உணவுகளை சாப்பிட்டால் ஆபத்து?...

கோழி.. ஆடு.. எந்த இறைச்சி உடலுக்கு நல்லது?!.. வாங்க பார்ப்போம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments