சளியை விரட்டும் இஞ்சி குழம்பு எப்படி செய்வது...?

Webdunia
தேவையான பொருட்கள்:
 
துவரம் பருப்பு - 2 ஸ்பூன் 
கடலை பருப்பு - 2 ஸ்பூன்
சாம்பார் பொடி - 2 ஸ்பூன் 
வெங்காயம் - 3
புளி - சிறிதளவு 
பூண்டு - 20 பல்
இஞ்சி - 25 கிராம் 
வறுத்து பொடித்த வெந்தயம் - 1 ஸ்பூன் 
கடுகு - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு 
பெருங்காயம் - சிறிதளவு 
கறிவேப்பிலை - சிறிதளவு 
நல்லெண்ணெய் - 4 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு 
புளி - சிறிதளவு
செய்முறை:
 
முதலில் இஞ்சி, பூண்டு, வெங்காயத்தை மிக்சியில் போட்டு நைசாக அரைக்கவும். புளியை தேவையான தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்து   கொள்ளவும்.
கடாயில் நல்லெண்ணெய் விட்டு, கடுகு, கடலை பருப்பு, துவரம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் அரைத்த விழுதை போட்டு வதக்கவும். நன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். அடுத்து அதில் மஞ்சள் தூள் சேர்க்கவும். அடுத்து 1 டம்ளர் தண்ணீர், புளி கரைத்த   தண்ணீர், சாம்பார் பொடி, பெருங்காய தூள், வறுத்த வெந்தய பொடி, உப்பு எல்லாம் சேர்க்கவும். 
 
நன்கு கொதித்து கெட்டியாகி எண்ணெய்  பிரிந்து வரும்போது இறக்கவும். நல்ல மணமுள்ள இஞ்சி குழம்பு தயார். இந்த இஞ்சி குழம்பு  வயிற்று உபாதைகளுக்கு மிகவும் நல்லது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முகத்துக்கு பாடி லோஷன் கூடாது: நிபுணரின் அவசர எச்சரிக்கை!

கண்களைப் பாதுகாக்க தினமும் செய்ய வேண்டிய அத்தியாவசியப் பழக்கங்கள்!

செரிமான மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டால் மனநலமும் பாதிக்குமா?

கண்ணில் ரத்தக் கசிவு: நீரிழிவு, இரத்த அழுத்தம் காரணமா?

ஒல்லியானவர்களுக்கு கூட கொழுப்பு நிறைந்த கல்லீரல் ஏற்படுவது ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments