முதலில் கடலைப் பருப்பை கழுவி 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் முள்ளங்கியை தோல் சீவி சதுரத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை, கொத்துமல்லி போட்டு தாளிக்கவும். மேலும் வாணலியில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு அதில் உப்பு, மஞ்சள், தனியா, மிளகாய் பொடிகளை சேர்க்கவும்.
தண்ணீர் நன்கு கொதித்ததும் பருப்பு மற்றும் முள்ளங்கியை சேர்த்து வேக வைக்கவும். பின்னர் சர்க்கரை, புளி சேர்த்து இரண்டு நிமிடங்கள் கிளறிவிட்டு இறக்கவும். இதில் நீங்கள் விரும்பும் எந்த காய்கறியையும் சேர்த்துக் கொள்ளலாம்.