Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மரவள்ளிக் கிழங்கு புட்டு செய்ய...!!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
மரவள்ளிக் கிழங்கு - 1 கிலோ
தேங்காய் துருவல் - 1 1/2 கப்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
 
முதலில் மரவள்ளிக் கிழங்கு தோலை நீக்கிவிட்டு, நீளத் துண்டுகளாக வெட்டி கொள்ளவும். பின்பு அவற்றை துருவிக் கொள்ளவும், பின்பு அதனுடன் சிறிதளவு உப்பு  சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
 
பின்பு அவற்றில் இருக்கும் பாலை பிழிந்து வெளியேற்றி விட்டு ஒரு பாத்திரத்தில் அவற்றை வைத்துக்கொள்ளவும். பின்பு புட்டு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி சூடேற்றி கொள்ளவும்.

பின்பு புட்டு குழலை எடுத்துக்கொண்டு, அதனுள் சிறிய ஓட்டை உள்ள தட்டை வைத்து, முதலில் தேங்காய் துருவலை சிறிதளவு போட்டு கொள்ளவும். பின்பு  மரவள்ளிக் கிழங்கு துருவலை போடவும், இவ்வாறு தொடர்ந்து தேங்காய் துருவல், மரவள்ளிக் கிழங்கு துருவல் என்று குழலை நிரப்பவும். குழல் நிரம்பியதும் இந்த  குழலை புட்டு பாத்திரத்தில் இணைத்து, வேக வைத்து இறக்கினால். சுவையான மரவள்ளிக் கிழங்கு புட்டு தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரிட்ஜ் எல்லாம் வேண்டாம்.. மண்பானை தண்ணீர் குடித்தால் இவ்வளவு பயன்கள் இருக்குது..!

இரட்டை நுரையீரல் மாற்று சிகிச்சையை வெற்றிகரமாக செய்து காட்டிய ரேலா மருத்துவமனை!

காலை எழுந்தவுடன் இந்த 7 செயல்களை செய்யுங்கள்.. நோயே வராது..!

ரத்த சோகை குறைய வேண்டுமா? தினமும் ஒரு முந்திரி பழம் சாப்பிடுங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments