Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரிசி மாவு வடகம் செய்ய !!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
அரிசி மாவு - 1கப்
தண்ணீர் - 4 கப்
பச்சை மிளகாய் விழுது - காரத்திற்கு ஏற்ப
உப்பு - தேவைக்கு
வெள்ளை எள் - 1 டீ ஸ்பூன்

செய்முறை:
 
வாணலியில் தண்ணீர் ஊற்றி, கொதிக்க விடவும். ஒரு பாத்திரத்தில், மாவுடன் தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். இதற்கு தண்ணீர் அளவு தேவையில்லை.

அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, கரைத்த மாவை, கொதிக்கும் நீரில் ஊற்றி, கைவிடாமல் கிளறவும். கட்டி சேராமல் கிளறியதும், அடுப்பை முழு சூட்டில் வைக்கவும்.
 
மாவு வெந்து வரும் பொழுது, குமிழ்கள் தோன்றி தெறிக்கும். கவனமாக இருக்க வேண்டும். வெந்த மாவு சற்றே நிறம் மாறும்.அப்பொழுது, கையை தண்ணீரில் நனைத்து, மேலாக தொட்டு பார்க்கவும். விரலில் ஒட்டாமல் இருந்தால், பச்சை மிளகாய் விழுது, உப்பு, எள் சேர்த்து, இரண்டு நிமிடங்கள் நன்கு கிளறி விடவும். 
 
சூடு ஆறிய பின், சுத்தமான வெள்ளை துணியில், சிறு துண்டுகளாக வைத்து, ஆற விடவும். வெயிலில் நன்கு காய வைத்து எடுக்கவும். சுவையான அரிசி மாவு  வடகம் தயார்.

தொடர்புடைய செய்திகள்

எவ்வளவு செல்சியஸ் வெயில் இருந்தால் என்ன அலெர்ட்? – பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?

செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

தண்ணீர் குறைவாக குடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

பெண்கள் மேம்பாட்டுக்கான "அன்பு" என்ற புதிய சேவை! சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் தொடக்கம்!

கோடை வெயிலில் தாக்கும் ஹீட் ஸ்ட்ரோக்! பாதுகாப்பாக இருப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments