சுவையான மோர்க்குழம்பு செய்ய !!

Webdunia
தேவையான பொருட்கள்: 
 
துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்
வெந்தயம் - அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 5
தேங்காய் துருவல் - ஒரு டேபிள் ஸ்பூன்
புளிப்பில்லாத கடைந்த மோர் - ஒரு கப்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
இஞ்சி - சிறிய துண்டு
கடுகு - அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
சுண்டைக்காய் - 15
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
தேங்காய் எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: 
 
துவரம்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் கலந்து 20 நிமிடம் ஊற வைக்கவும். கடாயில் சிறிதளவு நல்லெண்ணெய் விட்டு, வெந்தயம் சேர்த்து வறுக்கவும்.

பிறகு, பச்சை மிளகாய், ஊற வைத்த பருப்பு சேர்த்து நன்கு வதக்கி இஞ்சி, கொத்தமல்லி, தேங்காய் துருவல், சீரகம் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். 
 
அரைத்த கலவையுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கலந்து மிதமான தீயில் வைத்து மஞ்சள்தூள், உப்பு சேர்த்து லேசாக கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும். பிறகு அதனுடன் கடைந்த மோர் சேர்க்கவும். தேங்காய் எண்ணெய்யில் சுண்டைக்காயை சிவக்க வறுத்து மோர்க் கலவையில் சேர்க்கவும். 
 
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி நன்கு கலந்து பரிமாறவும். சுவையான மோர்க்குழம்பு தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலிபிளவர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

உருளைக்கிழங்கு: நன்மையா, தீமையா? - அறிந்துகொள்ள வேண்டிய உண்மைகள்

வாழைத்தண்டு உணவில் சேர்ப்பதால் ஏற்படும் அற்புதமான நன்மைகள்..!

உடல் எடையை எளிய முறையில் குறைக்க அற்புதமான 5 வழிகள்!

ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும் பாலக் கீரை! அதிசய பலன்கள் தரும் எளிய சமையல் முறை

அடுத்த கட்டுரையில்
Show comments