Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆரோக்கியம் நிறைந்த சுக்கு மல்லி காபி செய்வது எப்படி...?

Webdunia
வியாழன், 1 செப்டம்பர் 2022 (13:13 IST)
மழைக்காலங்களில் சுக்கு மல்லி காபி குடிப்பது ரொம்ப நல்லது. தொண்டை கரகரக்கும் போது, சளி பிடித்திருக்கும் போது இந்த காபி குடிப்பது இதமாக இருக்கும். இந்த சுக்கு மல்லி காபி பொடியை செய்து காற்றுப்புகாத டப்பாவில் வைத்து அவ்வப்போது பயன்படுத்தலாம்.


தேவையான பொருட்கள்:

கொத்தமல்லி விதை - 1/4 கப்
மிளகு - 1 டீஸ்பூன்
ஏலக்காய் - 2
சுக்கு - 1 அங்குல துண்டு
பனை வெல்லம் - 1/3 கப்


செய்முறை:

வெறும் கடாயில் மல்லி விதை, மிளகு, ஏலக்காய் இவற்றை வாசனை வரும் வரை வறுத்து ஆறவைக்கவும். சுக்கு தோலினை சுரண்டிவிட்டு லேசாக நசுக்கி கொள்ளவும். அனைத்தையும் ஒன்றாக கொரகொரப்பாக பொடிக்கவும்.

பனை வெல்லத்தை துருவி நீர் ஊற்றி கொதிக்க வைத்த பின் வடிகட்டவும். பாத்திரத்தில் 1 கப் நீர் ஊற்றி 1 டேபிள் ஸ்பூன் பொடித்த சுக்கு மல்லி பொடியை போட்டு கொதிக்க வைக்கவும். கொதித்த பின் வடிகட்டி பனை வெல்ல நீரை கலந்து சூடாக பருகவும். ஆரோக்கியம் நிறைந்த மழைக்கு ஏற்ற சுக்கு மல்லி காபி தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தூக்கம் வரவில்லை என்றால் தூக்க மாத்திரை வேண்டாம்.. இதோ இயற்கையான சில பொருட்கள்..!

முகம் பளிச்சென மாற வேண்டுமா? கடுக்காய் பொடி ஒன்று இருந்தால் போதும்..!

கோதுமை மாவு ஒன்று போதும் சருமம் மென்மையாக.. ஆச்சரிய தகவல்..!

உடல் எடை குறைப்பிற்காக தனி ‘நலம்’ க்ளினிக்! எம்ஜிஎம் ஹெல்த்கேர் தொடங்கியது!

காளான்கள் எல்லா வகையிலும் உணவுக்கு ஏற்றவை அல்ல.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments