Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிகவும் டேஸ்டியான வடகறி செய்வது எப்படி...?

Webdunia
தேவையான பொருட்கள்:
 
கடலை பருப்பு - 1 கப்
வர மிளகாய் - 3
சோம்பு - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வெங்காயம் - 1
தக்காளி - 2
இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன்
தனியாத் தூள் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
பட்டை - 2
கிராம்பு - 2
பிரியாணி இலை - 1
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - ஒரு கொத்து
செய்முறை:
 
முதலில் பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து எடுத்து மிக்ஸில் போட்டும் வரமிளகாய்,சோம்பு ,மற்றும் உப்பு சேர்த்து கொரகொரப்பாக  அரைத்து கொள்ளவும்.
 
பின்னர் வாணலில் எண்ணெயை ஊற்றி சிறிய வடைகளை போட்டு பொன்னிறமாக தனியாக எடுத்து வைத்து கொள்ளவும். பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
 
பின்னர் இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். அதனுடன் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வாங்கவும். அதோடு, தக்காளியை தோல் நீக்கி  மிக்ஸில் அரைத்து சேர்த்து கொள்ளவும். பின்னர் மிளகாய் தூள், தனியாத் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கலந்து விடவும். 2 டாப்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவேண்டும்.
 
பின்னர் செய்து வைத்துள்ள வடைகளை சிறிது சிறிதாக கட் செய்து போட்டு, 5 நிமிடம் கொதிக்க விடவும். இதனுடன் கொத்தமல்லி இலையை தூவி இறக்கவும். சுவையான வடகறி தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரத்த சோகை குறைய வேண்டுமா? தினமும் ஒரு முந்திரி பழம் சாப்பிடுங்கள்..!

நினைவாற்றல் குறைபாடு ஏற்பட என்னென்ன காரணங்கள்?

உடலில் இருக்கும் நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு.. இரண்டின் வேலைகள் என்ன?

தூக்கம் வரவில்லை என்றால் தூக்க மாத்திரை வேண்டாம்.. இதோ இயற்கையான சில பொருட்கள்..!

முகம் பளிச்சென மாற வேண்டுமா? கடுக்காய் பொடி ஒன்று இருந்தால் போதும்..!

அடுத்த கட்டுரையில்
Show comments