சுவையான பன்னீர் 65 செய்ய...!!

Webdunia
தேவையான பொருள்கள்:
 
பன்னீர் - 100 கிராம் 
மைதாமாவு - 2 மேஜைக்கரண்டி 
சோளமாவு - 1 மேஜைக்கரண்டி 
தயிர் - 1 மேஜைக்கரண்டி 
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 
சிவப்பு மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி 
கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி 
லெமன் சாறு - 1 மேஜைக்கரண்டி 
உப்பு - தேவையான அளவு 
பொரிப்பதற்கு எண்ணெய் - தேவையான அளவு 
செய்முறை:
 
பன்னீரை சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும். ஒரு வாயகன்ற பாத்திரத்தில் மைதாமாவு, சோளமாவு, தயிர், இஞ்சி பூண்டு விழுது, சிவப்பு  மிளகாய் தூள், கரம் மசாலா தூள், லெமன் ஜூஸ், உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக்கொள்ளவும்.
 
பிறகு பன்னீர் துண்டுகளை டிப் பண்ணி வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கடாய் கொள்ளும் அளவுக்கு பன்னீர் துண்டுகளை போடவும். ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போடவும். இருபுறமும் வெந்ததும் எடுத்து  விடவும். சுவையான பன்னீர் 65 தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்களைப் பாதுகாக்க தினமும் செய்ய வேண்டிய அத்தியாவசியப் பழக்கங்கள்!

செரிமான மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டால் மனநலமும் பாதிக்குமா?

கண்ணில் ரத்தக் கசிவு: நீரிழிவு, இரத்த அழுத்தம் காரணமா?

ஒல்லியானவர்களுக்கு கூட கொழுப்பு நிறைந்த கல்லீரல் ஏற்படுவது ஏன்?

உணவில் அடிக்கடி அவரைக்காய் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments