பாதி காலிஃளவரை அரிந்து சிறிது உப்பு சேர்த்த தண்ணீரில் நன்கு அலசி எடுத்துக் கொள்ளவும். பின்னர் பிரஷர் பானில் சிறிது வெண்ணெய்யைச் சூடாக்கி வெங்காயம், காலிஃளவர் சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கிய பின் தண்ணீர் ஊற்றி ஒரு விசில் வரும் வரை வேகவிடவும். அத்துடன் ஒரு கப் பால், சிறிது உப்பு சேர்க்கவும். பின்னர் அரை டம்ளர் தண்ணீரில் ஒன்றரை தேக்கரண்டி சோளமாவைக் கரைத்து ஊற்றவும். நன்கு கலந்து விட்டு சூடாக்கவும். அதில் தேவையான அளவு மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.