குக்கரில் நறுக்கிய முருங்கைக்காய், தக்காளி, பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தேவையான அளவிற்கு உப்பு, கரம் மசாலா தூள் ஆகியவற்றை போட்டு 2 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி மூடி சுமார் 5 நிமிடம் வேக விடவும்.
நன்கு வெந்ததும் அதனை ஒரு பாத்திரத்தில் வடிகட்டியை வைத்து, அதில் வேகவைத்த காய்கறிகளை போட்டு அதில் உள்ள சாற்றை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் சூப் பரிமாறுவதற்கு முன்பு சூப்பை சுட வைத்து கொதித்ததும் மேலே கொத்துமல்லி தழை, புதினா மிளகு தூள் தூவவும். பரிமாறும் போது மேலே எலுமிச்சை சாறை பிழிந்து பரிமாறவும்.