முருங்கைக்காய் சாதம்
தேவையானப் பொருட்கள் :
பச்சரிசி - 1 கப்
முருங்கைக்காய் விழுது - 2 கப்
வெங்காயம் - 1
தேங்காய்த் துருவல் - அரை கப்
மிளகாய் வற்றல் - 5
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
தனியாத்தூள் - அரை டீஸ்பூன்
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
கடுகு - கால் டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன்
கடலைப் பருப்பு - அரை டீஸ்பூன்
எண்ணெய் - கால் கப்
உப்பு - தேவையான அளவு
கொத்துமல்லி - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை :
அரிசியை சற்று உதிரிப் பதத்தில் வடித்துக் கொள்ளவும்.
முருங்கைக் காய்களை வேக வைத்து விழுதை எடுத்து சிறிது உப்பு சேர்த்து மசிக்கவும்.
தேங்காய்த் துருவலையும், மிளகாய் வற்றல்களையும் மிருதுவாக அரைத்துக் கொள்ளவும்.
எண்ணெயைக் காய வைத்து அதில் கடுகு போட்டு தாளித்து, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகியவற்றைத் போட்டு பொன்னிறத்தில் வறுக்கவும்.
பின்னர் அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
நன்கு வதக்கிய வெங்கயாத்துடன் முருங்கைக் காய் விழுது, புளி விழுது, பொடிகள் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
வதக்கிய விழுதில் சாதத்தைச் சேர்த்து நீர் வற்றும் வரை வேக விடவும்.
கறிவேப்பிலை, கொத்துமல்லி தழை தூவி இறக்கிவிடவும்.
அவ்வளவுதான் சத்தான சாதம் தயார். தயிர்ப் பச்சடியுடன் சேர்த்து பரிமாறலாம்.