Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவையான சாம்பார் செய்ய சில அற்புத டிப்ஸ்...!

Webdunia
சாம்பாரில் முள்ளங்கியை அப்படியே போடாமல் சிறிதளவு எண்ணெய் விட்டு வதக்கி போட்டால் சுவை கூடுதலாக இருக்கும்.
* சிறிதளவு பொரிகடலை, புழுங்கல் அரிசி இரண்டையும் வறுத்துப் பொடித்து, சாம்பார் பொடியுடன் சேர்த்தால், சாம்பார் சூப்பராக இருக்கும்.
 
* வெந்தயக் குழம்புக்கு வெந்தயத்தைத் தாளிக்காமல், வெறும் வாணலியில் நன்றாக வறுத்துப் பொடி செய்து தூவினால், குழம்பு மணமாக இருக்கும்.
 
* வெங்காய சாம்பார் செய்யும்போது, பெரிய வெங்காயம் வைத்துச் செய்யவும். சின்ன வெங்காயம் 7-8 வதக்கி சாம்பாருக்கு அரைக்கும் பொருட்களுடன் அரைத்து சாம்பாரில் கொட்டவும். மணம் வீட்டைத் தூக்கும்.
* சாம்பாரில் காய்களுடன் ஒரு பெரிய நெல்லிக்காயையும் கட் பண்ணிப் போட்டு சமைத்துப் பாருங்கள். கல்யாண சாம்பாரையும் மிஞ்சிவிடும் சுவை.  சத்தானதும் கூட.
 
* துவரம் பருப்புடன் வெந்தயத்தை அரைமணி நேரம் ஊறிய பிறகு வேகவிடவும். வழக்கமான புளி ஊறவைத்து சாம்பார் செய்யவும். மற்ற சாம்பாரைவிட இதற்கு ருசி அதிகம்.

தொடர்புடைய செய்திகள்

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments