Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விடுகதை‌க்கு ‌‌விடை தெ‌ரியுமா?

Webdunia
சனி, 23 பிப்ரவரி 2008 (10:51 IST)
‌ கீழே கொடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ‌விடுகதைகளு‌க்கு ‌விடை தெ‌ரி‌கிறதா எ‌ன்று பாரு‌ங்க‌ள். தெ‌ரிய‌வி‌ல்லை எ‌ன்றா‌ல் அடு‌த்த ப‌க்க‌ம் பாரு‌ங்க‌ள்.

1. குரலோசை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே?

2. மழையில் பிறந்து வெயிலில் காயுது?

3. நடைக்கு உதாரணம் சொல்வர், குறுக்கே நடந்தால் முகம் சுளிப்பர்?

4. நீண்ட உடம்புக்காரன், நெடுந்தூரப் பயணக்காரன்?

5. மாதத்தின் பெயர்தான், காலையிலேயே விற்பனைக்கு வந்துவிடும்?

6. இரவு வீட்டிற்கு வருவான், இரவு முழுவதும் இருப்பான் காலையில் சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டிருப்பான்?

7. வந்தால் கொண்டாட்டம், வராவிட்டால் திண்டாட்டம்

8. ஆடி ஆடி நடப்பான், அமைதியாக அதிர வைப்பான்?

9. ஒன்று போனால் மற்றொன்றும் வாழாது?

10. பூ கொட்ட கொட்ட ஒன்றையும் தனியே பொறுக்க முடியவில்லை?


விடைகளை அடுத்த பக்கத்தில் காணலாம்.

விடைகள்

1. தொலைபேசி

2. காளான்

3. பூனை

4. ரயில்

5. டிசம்பர்

6. நிலா

7. மழை

8. யானை

9. செருப்பு

10. மழை

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments