மத்தியப் பிரதேச மாநிலம் தார் பகுதியில் தேன் சேகரிக்கச் சென்ற இரண்டு பேர் தேனீக்கள் கொட்டியதால் உயிரிழந்துள்ளனர்.
தேனிக்கள் கொட்டினால் கடும் நமச்சலும், வலியும் இருக்கும். ஆனால் உயிரிழப்பு ஏற்படும் என்று இதுவரை அறிந்ததில்லை.
ஆனால், அதிக அளவிலான தேனீக்கள் சரமாரியாக கொட்டியதால் இந்த இருவரும் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது.
காந்திவனி என்ற மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கேல் சிங் (35), அவரது மாமன் கான் சிங் ஆகியோர் நேற்று காலை தேன் சேகரிக்கச் சென்றனர். தேன் கூட்டைக் கலைத்ததும் ம் அதில் இருந்த தேனீக்கள் இருவரையும் சரமாரியாகக் கொட்டத் துவங்கின.
அங்கிருந்து தப்பி வர இருவரும் செய்த முயற்சி பலனளிக்காமல் இருவரும் அங்கேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தனர்.