கருவுற்ற காலத்தில் பெண்கள் குடிப்பழக்கத்தைக் கொண்டிருந்தால், அது குழந்தைகளுக்கு பார்வைக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கர்ப்ப காலத்தில் குடிப்பழக்கம் உள்ள தாய்மார்களின் குழந்தைகளுக்கு ஏற்படும் பார்வைக் கோளாறு, கவனச் சிதறல், திடீர் மன உந்துதலால் மேற்கொள்ளும் செயல்கள் ஆகியவற்றிற்கு உள்ள தொடர்புகள் முந்தைய பல ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பாகவும், இந்த புதிய ஆய்வு முடிவுக்கான ஆதாரங்களின் உறுதித் தன்மை குறித்தும் பல கேள்விகள் எழுந்துள்ளன. குடும்ப பழக்க வழக்கங்கள், மரபணு காரணிகளுக்கும் கர்ப்ப கால குடிப்பழக்கத்திற்கும், குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும் சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
புளுமிங்டன்னில் உள்ள இண்டியாணா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பிரையன் எம். டிஓனோபிரியோவும் அவருடன் சிலரும் கடந்த 1979 ஆம் ஆண்டு பதிவு செய்தவர்களில் 4,912 தாய்மார்களின் விவரங்களையும், 2,004 வரை தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொண்டனர்.
இதில் அந்த தாய்மார்கள் கருவுற்ற காலத்தில் எடுத்துக் கொண்ட போதைப் பொருட்கள் தொடர்பாக பதில் அளித்த இருந்தனர்.கடந்த 1986 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு அடுத்த ஆண்டும் நடத்திய பரிசோதனையில் கருவுற்ற தாய்மார்களின் 4 முதல் 11 வயதிலான குழந்தைகள் 8,621 பேரிடமும் பழக்க வழக்கத்தில் கோளாறுகள் காணப்பட்டன.
ஒவ்வொரு வாரமும் கூடுதலாக கர்ப்ப காலத்தில் ஒருநாள் கூடுதலாக குடிக்கும் தாய்மார்களின் குழந்தைகளுக்கு அதிக அளவில் பார்வைக் கோளாறு ஏற்படுவது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.கல்வி நிலை, அறிவுத்திறன் ஆகியவற்றையும் பாதிப்பது தெரிய வந்துள்ளது.
கருவுற்ற காலத்தில் குடிக்காத பெண்களின் குழந்தைகளுக்கு ஏற்படுவதை விட, குடிக்கும் பெண்களின் குழந்தைகளுக்கு அதிக அளவில் பார்வை குறைபாடு , திடீர் மன எழுச்சி குறைபாடுகள் ஏற்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஒருமுறை கருவுற்ற போது குடிப் பழக்கத்துக்கு உள்ளாகியிருந்தாலும் அது மற்ற குழந்தைகளையும் அதே அளவுக்கு பாதிக்கும்.
சுற்றுச்சூழலால் குழந்தைகளுக்கு ஏற்படும் பார்வைக் கோளாரை விட கருவுற்ற காலத்தில் குடிக்கும் பழக்கத்தால் ஏற்படுவது அதிகம் என்பதும் தெரியவந்துள்ளது. இதைப் போன்று புகையிலை, தடைச் செய்யப்பட்ட பானங்கள், மற்ற போதை பொருட்கள் ஆகியவையும் இந்த வகையான குறைபாடுகளுக்கு ஏதுவாக உள்ளன.
எனவே கருவுற்ற காலத்தில் பெண்கள் குடிப்பதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப் பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.