Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரியங்கா காந்தி வருகைக்கு கொல்கத்தா பேரணிதான் காரணமா?

Webdunia
வியாழன், 24 ஜனவரி 2019 (22:58 IST)
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே இருக்கும் நிலையில் திடீரென காங்கிரஸ் கட்சி நேற்று பிரியங்கா காந்தியை களமிறக்கியுள்ளது. இவருடைய வருகையை பலர் குறிப்பிடும்போது மாயாவதி மற்றும் அகிலேஷ் கட்சிகளின் கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை சேர்த்து கொள்ளாததால் அவர்களுக்கு பதிலடி கொடுக்கவே பிரியங்காவை அறிமுகம் செய்துள்ளதாக கணித்துள்ளனர்.
 
ஆனால் உண்மை நிலவரம் வேறு என்று கூறப்படுகிறது. சமீபத்தில் கொல்கத்தாவில் நடந்த எதிர்க்கட்சிகளின் பேரணியில் கலந்து கொண்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஒருவர் கூட ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்று கூறவில்லை. கருணாநிதி சிலை திறப்பு விழாவின்போது 'ராகுல்காந்திதான் பிரதமர் என முழங்கிய ஸ்டாலின் கூட கொல்கத்தா கூட்டதில் பிரதமர் வேட்பாளர் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை
 
எனவே ராகுல்காந்திக்கு பதிலாக பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராக திடீரென அறிவித்தால் மூன்றாவது அணியில் உள்ள பலரது பார்வை காங்கிரஸ் பக்கம் திரும்பும் என்றே காங்கிரஸ் மேலிடம் நினைத்துள்ளதாக கூறப்படுகிறது. ராகுல்காந்தியின் இந்த அதிரடி அறிவிப்பு காங்கிரஸ் கட்சிக்கு பலத்தை கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு கோயிலுக்காக போரா? கம்போடியாவில் குண்டு மழை பொழியும் தாய்லாந்து! - என்ன காரணம்?

மாயமான ரஷ்ய விமானத்தின் பாகங்கள் சீனாவில் கண்டெடுப்பு! - என்ன நடந்தது?

விபச்சார விடுதி நடத்திய பெண்ணுக்கு உதவி.. 2 காவலர்கள் சஸ்பெண்ட்..!

முட்டை சாப்பிட மாட்டோம்.. டிசி கேட்டு பயமுறுத்தும் 80 மாணவர்கள்.. பள்ளியில் பரபரப்பு..!

மனைவியுடன் சண்டை.. பெற்ற மகளை கழுத்தறுத்து கொன்ற கணவன்! - சென்னையில் அதிர்ச்சி

அடுத்த கட்டுரையில்
Show comments