விக்ராந்த் படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதும் விஜய் சேதுபதி!

Webdunia
திங்கள், 29 அக்டோபர் 2018 (15:53 IST)
விக்ராந்த் நடிக்கும் புதிய படத்துக்கு நடிகர் விஜய் சேதுபதி திரைக்கதை, வசனம் எழுதுகிறார்.

நடிக்க வந்த குறுகிய காலத்தில் பல படங்களில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. செக்கச்சிவந்த வானம், 96 ஆகிய வெற்றிப் படங்களை தந்த விஜய் சேதுபதி, தனது 25வது படமான 'சீதக்காதி' படத்தின் வெளியீட்டுக்கான காத்திருக்கிறார்.


இதையடுத்து விக்ராந்த் நடிக்கும் புதிய படத்திற்காக திரைக்கதை, வசனம் எழுதவுள்ளாராம் விஜய் சேதுபதி. இப்படத்தை  விக்ராந்த்தின் சகோதரர் சஞ்ஜீவ் இயக்குகிறார்.

வெண்ணிலா கபடி குழு 2, பக்ரீத், சுட்டுப் பிடிக்க உத்தரவு ஆகிய திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார் விக்ராந்த். இதன் படப்பிடிப்புகள் முடிந்த பிறகு புதிய படத்திற்கான பணிகள் தொடங்குகிறார்.

முன்னதாக விஜய் சேதுபதி தான் நடித்த 'ஆரஞ்சு மிட்டாய்' படத்திற்கு அவரே வசனங்கள் எழுதியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

82 லட்சம் மதிப்பீட்டில் திறக்கப்பட்ட பூங்காவில் முறைகேடு.. கோவையில் அதிர்ச்சி

இனிமே விஜயை நம்பி யூஸ் இல்ல!.. வேறு கட்சிக்கு தாவிய தாடி பாலாஜி...

விஜய்கிட்ட கேள்வி கேளுங்க!... அப்ப புரியும்!.. போட்டு தாக்கிய உதயநிதி...

'இளம் பெரியார்' என்று அழைப்பது அந்த பெரியவருக்கே செய்யும் அவமானம்.. உதயநிதி குறித்து ஆதவ் அர்ஜூனா

பில் இவ்வளவா? சென்னை உணவகத்தில் சாப்பிட்ட நியூசிலாந்து சிறுவனின் ஆச்சரியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments