கவிக்கோவா? வைகோவா? மேடையில் உளறிய வைரமுத்து

Webdunia
ஞாயிறு, 6 ஜனவரி 2019 (22:11 IST)
அரசியல் கட்சி தலைவர்கள் மேடையில் பேசும்போது வாய்தவறி உளறுவது என்பது தமிழகத்தில் அடிக்கடி நடந்து வருகிறது. ஆனால் மேடை பேச்சுக்கென்றே ஒரு இலக்கணத்தை வகுத்து தூய தமிழில் பேசி வரும் கவியரசு வைரமுத்துவும் விழா ஒன்றில் பேசியபோது தடுமாறிய விவகாரம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருப்பூரில் கவிக்கோ அப்துல் ரகுமான் குறித்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கவியரசு வைரமுத்து பேச்சை முடிக்கும்போது வாழ்க கவிக்கோவின் புகழ் என்று கூறுவதற்கு பதிலாக வாழ்க வைகோவின் பெரும்புகழ் என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கவிக்கோ அப்துல் ரகுமானின் கவிதைத் திறன் குறித்து விரிவாக, சுவையாக பேசிய வைரமுத்து இறுதியில் தனது பேச்சை முடிக்கும் வாழ்க வைகோவின் பெரும் புகழ் என கூறினார். பின்னர் பார்வையாளர்கள் அவருடைய தவறை சுட்டிக்காட்டியவுடன், வாழ்க கவிக்கோவின் பெரும் புகழ் என முடித்துவிட்டு, தன்னுடைய தடுமாற்றத்திற்கு அரசியல் பாதிப்பே காரணம் என்று கூறினார்.

இதே விழாவில் கலந்து கொண்ட திமுக எம்பி கனிமொழி, 'விரைவில் வைரமுத்து அரசியலுக்கு வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் எங்க வீட்டுப்பிள்ளை.. கோத்துவிடாதீங்க!... பிரேமலதா விளக்கம்!..

18 மாதங்களாக பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த 2 கப்பல் தள ஊழியர்கள் கைது.. அதிர்ச்சி தகவல்..!

ஒரே ஒரு வீட்டை தவிர எனது வருமானம் முழுவதையும் கட்சிக்கு தருவேன்: பிரசாந்த் கிஷோர்

நன்றி மறந்தவர்கள், துரோகம் செய்தவர்களுக்கு பாடம் புகட்டுவோம்: பிரேமலதா விஜயகாந்த்..!

வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு.. இன்று 10 மாவட்டங்கள், நாளை 11 மாவட்டங்களில் கனமழை..!

அடுத்த கட்டுரையில்
Show comments