Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவிக்கோவா? வைகோவா? மேடையில் உளறிய வைரமுத்து

Webdunia
ஞாயிறு, 6 ஜனவரி 2019 (22:11 IST)
அரசியல் கட்சி தலைவர்கள் மேடையில் பேசும்போது வாய்தவறி உளறுவது என்பது தமிழகத்தில் அடிக்கடி நடந்து வருகிறது. ஆனால் மேடை பேச்சுக்கென்றே ஒரு இலக்கணத்தை வகுத்து தூய தமிழில் பேசி வரும் கவியரசு வைரமுத்துவும் விழா ஒன்றில் பேசியபோது தடுமாறிய விவகாரம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருப்பூரில் கவிக்கோ அப்துல் ரகுமான் குறித்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கவியரசு வைரமுத்து பேச்சை முடிக்கும்போது வாழ்க கவிக்கோவின் புகழ் என்று கூறுவதற்கு பதிலாக வாழ்க வைகோவின் பெரும்புகழ் என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கவிக்கோ அப்துல் ரகுமானின் கவிதைத் திறன் குறித்து விரிவாக, சுவையாக பேசிய வைரமுத்து இறுதியில் தனது பேச்சை முடிக்கும் வாழ்க வைகோவின் பெரும் புகழ் என கூறினார். பின்னர் பார்வையாளர்கள் அவருடைய தவறை சுட்டிக்காட்டியவுடன், வாழ்க கவிக்கோவின் பெரும் புகழ் என முடித்துவிட்டு, தன்னுடைய தடுமாற்றத்திற்கு அரசியல் பாதிப்பே காரணம் என்று கூறினார்.

இதே விழாவில் கலந்து கொண்ட திமுக எம்பி கனிமொழி, 'விரைவில் வைரமுத்து அரசியலுக்கு வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், ஆனால் 2026ல் அல்ல: திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக? 10 தொகுதிகள் + 1 ராஜ்யசபா தொகுதியா?

விமான விபத்து.. மெடிக்கல் கல்லூரியில் தாய், மகளின் உடலை தேடி அலையும் இளைஞர்.. கண்ணீர் பேட்டி..!

நூற்றுக்கணக்கான ட்ரோன்களை ஏவிய ஈரான்.. இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி..!

விமான விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு உடனடி இழப்பீட்டு தொகை: எல்.ஐ.சி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments