Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக பேட்மிண்டன் போட்டி - இந்திய வீரர் ஸ்ரீகாந்த் போராடி வெற்றி

Webdunia
புதன், 1 ஆகஸ்ட் 2018 (15:50 IST)
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் சீனாவில் நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது.
 
கடந்த ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 5ம் தேதி வரை நடைபெற உள்ள உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் சீனாவின் நான்ஜிங் நகரில் நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது. இதில் இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
 
இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் 2வது சுற்றில் இந்திய வீரர் கிதம்பி ஸ்ரீகாந்த், ஸ்பெயின் நாட்டின் பேப்லோ அபியனை எதிர்கொண்டார்.
 
ஆட்டத் தொடக்கத்திலே முன்னிலையில் இருந்த ஸ்ரீகாந்த் முதல் செட்டை கைப்பற்றி(21-15), பின் இரண்டாம் செட்டை(12-21) அபியனிடம் பறி கொடுத்து விட்டார்.  அதன்பின்னர் போராடி 3வது செட்டை(21-14) கைப்பற்றினார்.
 
இந்த வெற்றியின் மூலம் அவர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments