Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு 2 லட்சம் நிதியுதவி - ரஜினிகாந்த்

Webdunia
புதன், 30 மே 2018 (12:02 IST)
தூத்துக்குடிக்கு சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு 2 லட்சம் நிதியுதவி அளிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
தனது அரசியல் வருகை குறித்த அறிவுப்பு பின்னர் முதன்முறையாக மக்கள் பிரச்சனைக்காக களமிறங்குகிறார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலவரம் வெடித்து காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.
 
இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தற்பொழுது நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார் ரஜினிகாந்த்.
 
ரஜினிகாந்த் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்திற்கு 2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும் நிதியுதவி அளிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
ரஜினிகாந்தின் வருகையையொட்டி தூத்துக்குடியில் போலீஸார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments