Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேமுதிகவை அடுத்து அதிமுகவில் இணைந்த மேலும் ஒரு கட்சி

Webdunia
திங்கள், 4 மார்ச் 2019 (22:38 IST)
அதிமுக கூட்டணியில் ஏற்கனவே பாமக, பாஜக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் ஏற்கனவே இணைந்துள்ள நிலையில் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை துணை முதல்வர் ஓபிஎஸ் சந்தித்து பேசியதால் தேமுதிகவும் அதிமுக கூட்டணியில் இணைவது உறுதியாகிவிட்டது. அதேபோல் புதுவையில் ரங்கசாமி கட்சியுடன் அதிமுக கூட்டணி இணைந்துள்ளது

இந்த நிலையில் இன்று அதிமுக கூட்டணியில் மேலும் ஒரு கட்சியாக புதிய நீதிக்கட்சி இணைந்துள்ளது இந்த கட்சிக்கு அதிமுக கூட்டணியில் ஒரு தொகுதி வழங்கப்பட்டுள்ளது இந்த தொகுதியில் அக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது

ஆக மொத்தம் அதிமுக கூட்டணியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் பாமக 7, பாஜக 5, தேமுதிக 5 (உத்தேசமாக), புதிய தமிழகம் 1, புதிய நீதிக்கட்சி 1, ரங்கசாமி கட்சி 1 என மொத்தம் 20 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கும் 20 தொகுதிகள் அதிமுகவுக்கும் கிடைத்துள்ளது என்பதுதான் தற்போதைய நிலை

அதிமுக, திமுக கூட்டணிகள் கிட்டத்தட்ட தொகுதி உடன்பாடுகளை முடித்துவிட்ட நிலையில் அமமுக, மநீக, போன்ற கட்சிகள் அடுத்த என்ன நடவடிக்கை எடுப்பது என்று தெரியாமல் இருப்பது போல் தெரிகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

இந்தியாவில் நுழைகிறது டெஸ்லா.. ஆட்கள் தேர்வு செய்ய விளம்பரம்..!

17 வயது சிறுமி, 7 மாணவர்களால் கூட்டுப் பாலியல் வன்முறை.. அண்ணாமலை கண்டனம்..!

சென்னையில் 34 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும்: வானிலை ஆய்வு மையம்..!

சொந்த வீடு, பான் அட்டை, ஆதார் அட்டை.. 30 ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்த வங்கதேச தம்பதி கைது

அடுத்த கட்டுரையில்
Show comments