கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்

Webdunia
செவ்வாய், 17 ஏப்ரல் 2018 (11:35 IST)
வருகிற மே 12 ந் தேதி கர்நாடக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது.
கர்நாடக சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 12 ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஏப்ரல் 17-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் கூறியிருந்த நிலையில், இன்று வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க தேர்தல் அலுவலகங்களை சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் வரும் 24 ந் தேதி காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மனு தாக்கல் செய்யலாம். மனுக்கள் மீதான பரிசீலனை 25ந் தேதி நடைபெற உள்ளது.  மனுக்களை வாபஸ் பெற 27-ந் தேதி கடைசி நாள் ஆகும். 
 
கர்நாடகாவில் ஆளுங் கட்சியான காங்கிரஸ் மற்றும் பாஜகவும் தங்கள் கட்சி வெற்றி பெற வேண்டுமென, சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments