Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பத்து நாட்கள் கழித்து பார்வையிட வரும் நிர்மலா சீதாராமன்: டெல்டா மக்கள் அதிருப்தி

Webdunia
செவ்வாய், 27 நவம்பர் 2018 (22:01 IST)
தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் கடந்த பத்து நாட்களுக்கு முன் கஜா புயல் கோரத்தாண்டவம் ஆடி பெரும் சேதங்களை ஏற்படுத்தியது. இந்த சேதத்தை பார்வையிட்டு அப்பகுதி மக்களுக்கு ஆறுதல் சொல்ல பிரதமர் மோடி உள்பட மத்திய அமைச்சர்கள் யாரும் வருகை தராதது அந்த பகுதி மக்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.

இந்த நிலையில் கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாளை அல்லது நாளை மறுநாள் தமிழகம் வருவார்  என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மத்திய குழுவே பார்வையிட்டு சென்ற பின்னர் பத்து நாட்கள் கழித்து இனிமேல் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்து என்ன பயன்? என டெல்டா பகுதி மக்கள் அதிருப்தியுடன் காணப்படுவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

தமிழகத்தின் முதல்வர் வேட்பாளராக நிர்மலா சீதாராமன் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக செய்திகள் கசிந்து வரும் நிலையில் டெல்டா பகுதி மக்களின் இந்த அதிருப்தி பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments