நிர்பயா வழக்கு: மரண தண்டனையை உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட்

Webdunia
திங்கள், 9 ஜூலை 2018 (15:12 IST)
டெல்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயாவை பாலியல் பலாத்கரம் செய்து கொலை செய்த ஆறு பேர் கொண்ட கும்பல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது தெரிந்ததே.  ராம் சிங், முகேஷ், வினய் ஷர்மா, பவன் குப்தா உள்பட ஆறு பேர் மீதான வழக்கு நடந்து கொண்டிருந்தபோது ராம்சிங் திஹார் சிறையில் 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அதேபோல் குற்றவாளிகளில் ஒருவர் சிறுவர் என்பதால் அவர் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் தண்டனை முடிந்து விடுதலையானார். 
 
இந்த நிலையில் இந்த வழக்கில் முகேஷ், வினய், அக்ஷய், பவன் ஆகிய 4 பேர்களுக்கும் தூக்குத் தண்டனை விதித்து டெல்லி விரைவு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து நால்வரும் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். டெல்லி ஐகோர்ட்டும் தண்டனையை உறுதி செய்ததை அடுத்து மீண்டும் நால்வரும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர்.
 
இந்த மனுமீதான விசாரணை முடிவடைந்து சற்றுமுன் தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இன்று அளித்த தீர்ப்பில் நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கான மரண தண்டனையை உறுதி செய்தது. இதனால் குற்றவாளிகளான நால்வருக்கும் விரைவில் தூக்குதண்டனை நிறைவேற்றப்படும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

140 கிமீ வேகத்தில் பைக் சாகசம் செய்த 18 வயது இளைஞர்.. விபத்தில் தலை துண்டாகி மரணம்..!

சஞ்சார் சாத்தி செயலி கட்டாயம்: திடீரென பின்வாங்கிய மத்திய அரசு.. புதிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்