Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீமான் முன்ஜாமீன் மனு தாக்கல்! கைது பயமா?

Webdunia
திங்கள், 21 மே 2018 (20:55 IST)
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மதுரை ஐகோர்ட் கிளையில் முன்ஜாமீன் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
 
சமீபத்தில் திருச்சி விமான நிலையத்திற்கு நாம் தமிழர் கட்சியின் சீமான் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் ஒரே நேரத்தில் வந்தடைந்தனர். இவர்கள் இருவரையும் வரவேற்க திரண்டிருந்த இரு கட்சிகளின் தொண்டர்கள் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.
 
இதுகுறித்து மதிமுக நிர்வாகி ஒருவர் அளித்தப் புகாரின் அடிப்படையில் சீமான் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி  நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி வினோத் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்
 
இந்த நிலையில் சீமானும் இந்த வழக்கில் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக காவல்துறை வட்டாரங்களில் இருந்து செய்தி பரவிய நிலையில் இன்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்ஜாமீன் கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுமீதான விசாரணை இன்னும் ஓரிரு நாட்களில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

நெல்லை ஜெயக்குமார் மரணம்.. கூடுதலாக 10 தனிப்படைகள்.. புதிய அதிகாரிகள் சேர்ப்பு..!

தொடர் சரிவில் பங்குச்சந்தை.. ஜூன் 4க்கு பின்னராவது உயருமா?

தங்கம் விலை இன்று திடீர் உயர்வு.. ஒரே நாளில் ரூ.560 உயர்ந்ததால் அதிர்ச்சி..!

மே 18-20.. 3 நாட்களுக்கு மிக கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை.. விஜய் பிறப்பித்த முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments