Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவல்துறை ஆணையரை சந்தித்த கருணாகரன்: விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
திங்கள், 8 அக்டோபர் 2018 (20:09 IST)
பிரபல காமெடி நடிகர் கருணாகரன் தனக்கு விஜய் ரசிகர்கள் கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் இதுகுறித்து இன்று காவல்துறை ஆணையரை சந்தித்து புகார் அளிக்கவுள்ளதாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் சற்றுமுன் கருணாகரன் சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் அவர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது தனக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது புகார் அளிப்பது குறித்த தகவல்களை கேட்டறிந்துள்ளார். இதனையடுத்து அவர் இன்னும் ஓரிரு நாட்களில் விரிவான புகார் ஒன்றை அளிக்கவுள்ளதாக அவரது தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

கருணாகரன் உண்மையிலேயே புகார் கொடுக்க நடவடிக்கை எடுத்து வருவதை அறிந்த விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் ஒருசிலர் டுவிட்டரில் பதிவு செய்த சர்ச்சைக்குரிய டுவீட்டுகளை டெலிட் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments