Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனிப்படை தேடிவரும் நிலையில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற எச்.ராஜா

Webdunia
திங்கள், 17 செப்டம்பர் 2018 (22:38 IST)
நீதிமன்றம் மற்றும் காவல்துறை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக பிரமுகர் எச்.ராஜா மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தனிப்படை போலீசார் ஒருபக்கம் அவரை கைது செய்ய தேடி வருகின்றனர்.

ஆனால் இன்னொரு பக்கம் எச்.ராஜா, திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடந்த விநாயகர் சதூர்த்தி பொதுவிழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்த விழாவில் பேசிய ஒருவர், 'எங்கள் தலைவன் தலைமறைவாகவில்லை. எங்கள் சிங்கம் எங்கேயும் ஓடி ஒளியவில்லை. முடிந்தால் கைது செய்து பார். ஆயிரக்கணக்கான தொண்டர்களை தாண்டித்தான் அவரை கைது செய்ய முடியும் என்று ஆவேசமாக பேசுகிறார்.

பொதுமேடையில் மக்கள் முன் ஒரு விழாவில் கலந்து கொண்டு பேசும் ஒருவரை தனிப்படை வைத்து தேடி வரும் ஒரே காவல்துறை தமிழக காவல்துறைதான் என நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கலாய்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் 4 வாரங்களில் நீதிமன்றத்தில் எச்.ராஜா ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் தான் போலீசார் அவரை கைது செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

தேர்தல் பரபரப்பு மற்றும் ஐபிஎல்.. தெலுங்கானாவில் மூடப்படும் திரையரங்குகள்..!

இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்.. முதல் முறையாக குடியுரிமை பெற்ற 14 பேர்..!

இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை பெய்யும்: எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments