ஊழல் வழக்கில் சிக்கிய முன்னாள் பிரதமர் அதிரடி கைது

Webdunia
செவ்வாய், 3 ஜூலை 2018 (16:13 IST)
ஊழல் வழக்கில் சிக்கிய மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீது ஏராளமான ஊழல் புகார்கள் இருந்து வந்தன. ஊழல் வழக்கை விசாரித்து வந்த அதிகாரிகள்  திடீரென நஜீப் ரசாக் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 72 பைகளில் பதுக்கி வைத்திருந்த 100 கிலோ தங்கம், ரூ.188 கோடி ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. 
இதையடுத்து அவர் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியானது. இருப்பினும் நஜீப் ரசாக் தன் மீதான குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வந்தார்.
 
இந்நிலையில் பணமோசடி தடுப்பு பிரிவினர் இன்று நஜீப் ரசாக்கின் வீடு புகுந்து அவரை அதிரடியாக கைது செய்தனர். இச்சம்பவம் மலேசிய அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொகுதி பங்கீட்டில் இழுபறி!.. இன்று டெல்லி செல்லும் எடப்பாடி பழனிச்சாமி...

25 தொகுதிகளுக்கு சம்மதிக்க முடியாது.. தவெகவுடன் கூட்டணி.. ராகுல் காந்தி அதிரடி முடிவு?

போர் எதிரொலி!.. 33 விமான சேவைகள் ரத்து!.. சென்னை விமான நிலையத்தில் பயணிகள் அவதி..

விஜய்யின் தஞ்சை கூட்டத்திற்கு அனுமதி? தவெகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படுமா?

48 முக்கிய ஈரானிய தலைவர்களை கொன்றுவிட்டோம்.. டிரம்ப் கொக்கரிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments