Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் பார்த்த முதல்வர்களில் எடப்பாடி தான் பெஸ்ட்: பிரபல நடிகை

Webdunia
செவ்வாய், 18 டிசம்பர் 2018 (23:25 IST)
எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி முதல் தற்போதைய சூர்யா வரை மூன்று தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடித்த பெருமை பழம்பெரும் நடிகை சரோஜாதேவிக்கு உண்டு. இந்த நிலையில் இன்று சென்னையில் நடைபெற்ற 'சென்னையில் திருவையாறு' தொடக்க விழாவில் நடிகை சரோஜாதேவி கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்த நிலையில் சிறப்புரை ஆற்றிய சரோஜாதேவி கூறியதாவது: நான் இதுவரை பார்த்த முதல்வர்களில் முகத்தில் எப்போதும் புன்சிரிப்போடு இருப்பவர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே. மற்றவர்கள் சிடு சிடுவென இருப்பார்கள். தமிழகத்திற்கு என்றைக்கும் எடப்பாடி பழனிசாமியே முதல்வராக இருக்க வேண்டும்

மேலும் எடப்பாடி அவர்கள் எம்.ஜி.ஆரை போல ஏழை மக்களுக்கு பல திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments