Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 ரூபாய் செக்கை மாற்ற 500 ரூபாய் செலவழிக்க வேண்டுமா? விவசாயிகள் வேதனை

Webdunia
வெள்ளி, 23 மார்ச் 2018 (15:28 IST)
மழை பொய்த்து பயிர் வாடினாலோ அல்லது வெள்ளத்தில் பயிர் மூழ்கிவிட்டாலோ விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீடு தொகையை தமிழக அரசு வழங்குவது வழக்கம். இந்த தொகை கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும். ஒவ்வொரு விவசாயிக்கும் அவர்களுக்கு ஏற்பட்ட சேதத்தின் மதிப்புக்கு ஏற்றவாறு இந்த பயிர்க்காப்பீட்டு தொகை இருக்கும்

இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள, மத்திய கூட்டுறவு வங்கி அதே மாவட்டத்தில் உள்ள போடுவார்பட்டி என்ற கிராம விவசாயிகளுக்குப் பயிர்க் காப்பீட்டு இழப்பீடாக, ரூ.5, ரூ.10 என காசோலை வழங்கியதாக தெரிகிறது. ஒருசிலருக்கு ரூ.2, ரூ.3க்கும் காசோலைகள் வந்துள்ளதாம்

வங்கியில் கணக்கு இல்லாத விவசாயிகள் இந்த ஐந்து ரூபாய் செக்கை மாற்ற ரூ.500 செலவு செய்து வங்கி கணக்கு தொடங்க வேண்டிய நிலை இருப்பதாக வேதனையுடன் தெரிவித்துள்ளனர். இது வங்கி அதிகாரிகளின் தவறா? அல்லது உண்மையிலேயே பயிர்க்காப்பீடு தொகை இவ்வளவுதானா? என்று புரியாமல் அந்த பகுதி
விவசாயிகள் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments