Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினிகாந்தை கார்ப்ரேட் நிறுவனங்கள் இயக்குகின்றன - சரத்குமார்

Webdunia
சனி, 2 ஜூன் 2018 (11:49 IST)
ரஜினிகாந்தை கார்ப்ரேட் நிறுவனங்கள் இயக்குகின்றன என்று சரத்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
 
போராட்டக்காரர்களிடையே சமூக விரோதிகள் ஊடுருவி போலீசை தாக்கியதால் தான் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்ததாகவும், அந்த சமூக விரோதிகளை அடையாளம் கண்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  தூத்துகுடிக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த் கூறினார். 
 
மேலும் எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றால் தமிழ்நாடே சுடுகாடாகிவிடும் என்றும் வேலை வாய்ப்புகள் பாதிக்கும் என ரஜினி ஆவேசமாக கூறினார்.
இந்நிலையில் தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களை, சந்தித்த பின் பேசிய சரத்குமார் வன்முறை எண்ணம் இருந்திருந்தால் குடும்பத்தோடு, குழந்தை-குட்டிகளோடு பொதுமக்கள் போராட்டத்திற்கு வந்திருப்பார்களா?
 
உரிமைக்காக போராடியவர்கள் சமூக விரோதிகள் என்றால் காவிரிக்காக போராடியவர்கள் சமூக விரோதிகளா? போராட்டத்தால் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படும் என ரஜினி கூறியிருப்பதன் மூலம் அவரை கார்ப்பரேட் நிறுவனங்கள் இயக்குகின்றன என்பது தெளிவாகிறது என ரஜினியை ஆவேசமாக தாக்கி பேசினார் சரத்குமார்.

தொடர்புடைய செய்திகள்

நடிகை கெளதமி சகோதரரும் ஏமாந்துவிட்டாரா? மோசடி செய்த ரியல் எஸ்டேட் நபர் மீது வழக்குப்பதிவு..!

பள்ளி மாணவர்களுக்கு முதல் நாளே பாடநூல்கள் விநியோகம்: பள்ளிக்கல்வித் உத்தரவு

தேர்தல் செலவுக்கு திரட்டிய நிதியில் வீடு கட்டும் கன்னையா குமார்.. இதுதான் புரட்சியா?

புனே கார் விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் தாத்தா தீவிரவாதியுடன் தொடர்புடையவரா? அதிர்ச்சி தகவல்..!

வங்க கடலில் ரெமல் புயல்! கனமழை மற்றும் மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments