Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டெர்லைட் மூடப்பட்டதால் தமிழக அரசுக்கு சிரமம்: அமைச்சர் தங்கமணி

Webdunia
வெள்ளி, 8 ஜூன் 2018 (13:07 IST)
தூத்துகுடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அந்த பகுதி மக்கள் கடந்த பல வருடங்களாக போராடி வந்தனர். சமீபத்தில் ஆலையை நிரந்தரமாக மூடியே தீர வேண்டும் என்று நடந்த போராட்டத்தில் 13 பேர் பலியாகினர். இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து அந்த ஆலைக்கு தூத்துகுடி கலெக்டர் சீல் வைத்தார். இதனால் ஆலை தற்போது மூடப்பட்டுள்ளதால் காப்பர் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் இன்று சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் தங்கமணி, 'ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் மின்மாற்றிகளுக்கு தேவையான காப்பர் கிடைப்பதில் சிரமம் இருப்பதாகவும், தாமிரத்தை வெளியில் இருந்து வாங்கி அமைக்க வேண்டியுள்ளதால் மின்மாற்றிகள் அமைப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் மாற்று இடத்தில் காப்பர் வாங்கப்படுவதாகவும் கூறினார். சிரமம் இருந்தாலும் ஸ்டெர்லைட் ஆலை இனி திறக்க வழியில்லை என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 
இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மூட தற்போது அரசு வெளியிட்டுள்ள அரசாணை என்பது கண்துடைப்பே என்றும், ஆலை நிர்வாகம் நீதிமன்றத்திற்கு சென்றால் அரசாணை ரத்து செய்யப்பட்டு விடும் என்றும் எனவே அமைச்சரவையைக் கூட்டி சட்டமன்றத்தில் ஆலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் கருணாஸ் எம்.எல்.ஏ கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments