Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் மு.க.ஸ்டாலின் - சந்திரபாபு நாயுடு சந்திப்பு: மெகா கூட்டணிக்கு அச்சாரமா?

Webdunia
வெள்ளி, 9 நவம்பர் 2018 (08:52 IST)
ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, பாஜகவுக்கு எதிராக ஒரு மெகா கூட்டணியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்த நிலையில் நேற்று மதசார்பற்ற ஜனதாதள தலைவர் தேவேகவுடா மற்றும் கர்நாடக முதல்வர் குமாரசாமியையும் சந்திரபாபு நாயுடு சந்தித்துள்ளார்.

இந்த நிலையில் இன்று சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசவுள்ள சந்திரபாபு நாயுடு, பாஜகவுக்கு எதிரான மதச்சார்பற்ற மெகா கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசனை செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

இன்று மாலை 6 மணிக்கு சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது. சுமார் இரண்டு மணி நேரம் நடைபெறும் இந்த சந்திப்பின்போது காங்கிரஸ் தலைமையிலான மெகா கூட்டணி அமைப்பது, அந்த கூட்டணியில் எந்தெந்த கட்சியை இணைப்பது என்பது குறித்து ஆலோசனை செய்யவுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments